Thursday, May 10, 2007

2007 காலை 8.00

மனிதர்கள் உபரியாய்த்தொங்கும் நகரப்பேருந்துகள்

குறுக்கிடும் மிதிவண்டிகள்

கூந்தல்முடித்து நகரும்
அக்குள் வியர்த்த பெண்கள்

தூக்கம் கலையாத சீருடைக்குழந்தைகள்

பச்சை அம்புக்குறிகள்
பெருஞ்சாலைகளைத்திறந்து மூடின

ஆகாயவிரிவில்
பொன்னிறக் கிரணங்கள் வெளுத்து
நரைத்தது சூரியன்

பறவைகளை இரைதேடவும்
மனிதர்களை அலுவலகங்களுக்கும் துரத்த
கரியமிலப்புகையுடன் ஆயிற்று
ஆதியில் தேவன் அருளிய
ஒரு காலைப்பொழுது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home