Thursday, May 10, 2007

கோடைகாலக்குறிப்பு

சென்றவாரத்தின் மதியப்பொழுதில் தெருவில் ஒரு குரலைக்கேட்டு சன்னலுக்கு வந்தேன்."மா...ம்..பழம்..மாம்பழம்' என்று அந்தக்குரல் தெருவின் வெயிலில் ஒரு பறவைபோலத்தணிந்து பறந்தது।அந்தக்குரலுக்கு உரியவரின் முகத்தைப்பார்க்கலாமென்று வாசலுக்குவந்தேன். தெருவின் முனையில் தேய்ந்தரப்பர் செருப்புகளுடன் னடந்து செல்லும் இரண்டு கால்களைத்தான் என்னால் பார்க்கமுடிந்தது।

தெருவில் யாரும் இல்லை।இரண்டு காகங்கள் குறுக்காகப்பறந்து மறைந்தன।
வீட்டுக்குள் வந்தபிறகும் மாம்பழம் எனும் அந்தக்குரலின் தீனம் என்னுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.மாம்பழம் குறித்த சிலகாட்சிகள் அதன் பின்எழுந்தன।

வடபழ்னியிலிருந்து சாலிகிராமம் வரும் அருணாசலம் சாலலயிலிருக்கும் பட்டுக்கோட்டை ஒயின்ஷாப்பிலிருந்து சில காதங்கள் தள்ளி சிறிய சாக்குவிரிப்பில் குவித்துவைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தன।தலைக்குமேல் அசையும் வேப்பமரத்தின் னிழல் கருதி அவர் அங்கே கடை விரித்திருக்கலாம்। வார இதழ்களை விற்கும் கடையின் அருகே அவர் அமர்ந்திருந்ததால் அதை வாங்குவதற்காக னான் எனது இருசக்கரவாகனத்திலிருந்து இறங்கும்போது முதலில் பொன்னிறத்திலிருந்த
மாம்பழங்களைப்பார்த்தேன்। பிறகு வார இதழ்களை வாங்கிவிட்டு என்வண்டிக்கு அருகே வருகையில் மாம்பழம் என்ற அந்தகுரலைக் கேட்டுத்திரும்பி அந்தமனிதரைப்பார்த்தே ।சவரம் செய்யாத னரைத்த தாடியுடன் ஒல்லியாக இருந்த அவர் தோணியது।அருகில் வந்ததுமதோட்டத்துப்பழ்ங்கள் என்று சொல்லி வினோதமமன அதன்பெயரையும் அவர் சொன்னார்।பிரத்தியேகமாக அதன் இனிப்பு
பற்றிச்சொன்ன அவர் ஏற்கனவே கேறப்பட்டிருந்த ஒரு ம்ஆம்பழத்திஅ எடுத்த்கு ஒரு கீறலை அரிந்து என்னிடம் தந்தார்।னார் இல்லாமல் இருந்த அந்த மாம்பழம் தித்திப்பாகவே இருந்தது।என் முகத்தைபபார்த்ததும் எப்படி?எனும் முகபாவத்துடன் என்னைப்பார்த்தார்।னானும் புன்னகைத்தேன்।

அதன்பிறகு தினமும் அவரிடம் மாம்பழம் வாங்கினேன்। தெலுங்கு கலந்த தமிழ் பேசும் அவருக்குமெனக்கும் இடையில் சம்பாசணைகள் எதுவும் அதிகமில்லை।வேலைமுடித்து வீட்டுக்கு வரும்போது ஐந்து மாம்பழங்கள்
இரண்டு னாளைக்கு ஒருமுறை னான் அவரைப்பார்த்தேன்।தொலைவில் என்னைப்பார்த்ததும் னீலனிற பிளாஸ்டிக்பையில் எனக்கான மாம்பழங்கள் இருக்கும்।

அன்று னான் தாமதமாக மூன்றுமணிக்கு னான் மதிய உணவுக்குத்திரும்பிபோது அவரது விரிப்பில் மாம்பழங்கள் இல்லை। னான் அருகில் வந்ததும் பிளாஸ்டிக் பையுடன் எழுந்து னின்றார்।அவ்வளவுதான் இந்த சீசன் என்று சொல்லி பழத்தைக் கொடுத்தார்।கடைசியாக கூடையிலிருந்த ஒரு மாம்பழத்தைக் கொசுறுவாகக்கொடுத்து அவ்வளவுதான் சார்॥இதுதான் இந்த சீசனுக்கு கடைசி என்றார்।

வீட்டுக்குவந்தும் அந்தப்பருவத்தின் கடைசிமாம்பழ்த்தைப்பார்த்தேன்।இந்தப்பருவத்தின் கடைசி என்கிற சொல் எனக்கு வினோதமான அர்த்தங்களைத்தந்தது।

அதன்விதையை வாடகைவீட்டின் பின்னால் இருந்த இடத்தில் மண்மூடிவைத்தேன்।அவர் சொன்னதுபோல அந்தபருவத்தில் அதற்குப்பிறகு மாம்பழங்கள் கிடைக்கவுமில்ல।னான் அதைத்தேடி வாங்கவுமில்லை


அடுத்த வெயில் காலம் வந்துவிட்டது.மாம்பழம் எனும் ஒலி தெருக்களில் கேட்கிறது।வீடு மாறியபிறகு அந்த கடைசிமாம்பழத்தின்விதை முளைத்ததா என்பதும் தெரியவில்லை।வயதான அந்த ம்னிதரையும் னான் பார்க்கவில்லை

3 Comments:

Anonymous Anonymous said...

நல்ல பதிவு செழியன்! எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்.

May 10, 2007 at 8:29 AM  
Blogger Chezhian Buddha said...

நன்றி
எழுத்துபிழைகளுக்கான காரணம்
ஈ கலப்பையின் பயிற்சியின்மை.
திருத்திக்கொண்டேன்.

இந்த வலைஉலகம் அற்புதமாயிருக்கிறது
உங்களுக்கு மிக்க நன்றி

May 11, 2007 at 3:27 AM  
Blogger eezhavani said...

சாதாரணமாய் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் கலைஞனின் பார்வையில் அற்புதமான அழகுகளே!

March 17, 2011 at 11:37 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home